Trending

அம்பேத்கர் தத்துவம் | ambedkar quotes in tamil

 

அம்பேத்கர் தத்துவம் ambedkar quotes in tamil


யார் இந்த அம்பேத்கர்? - அம்பேத்கர் தத்துவம் ambedkar quotes in tamil


மராட்டியத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், மத்திய பிரதேசத்தில் உள்ள இராணுவ பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர்தான் ராம்ஜி சக்பால்.  பணி நிமித்தமாக அங்கு உள்ள மாவ் என்ற ஊரில்  வசித்தபோது இராம்ஜி  சக்பாலுக்கும், பீமாபாய்க்கும் பதினான்காவது பிள்ளையாக மகர் என்ற தாழ்த்தப்பட்ட இனத்தில், 1891 ஆம் வருடம் ஏப்ரல் 13 ஆம் தேதி  பிறந்தவர்தான் அம்பேத்கார். ஆரம்பத்தில் அவருக்கு தாய் தந்தையர் வைத்த பெயர் பீமாராவ் இராம்ஜி.


பீமாராவ் இராம்ஜி சாத்தாரா எனும் பகுதியில் பள்ளி படிப்பை தொடங்கினார். தாழ்த்தப்பட்ட இனமானதால் எல்லா மாணவரோடு சேர்ந்து அமரக்கூடாது எல்லோரும் குடிக்கும் தண்ணீரை குடிக்கக் கூடாது, பிறர் மொண்டு தரும் தண்ணீரை கையில் வாங்கி குடிக்க வேண்டும். அவர்கள் புத்தககங்களை யாரும் தொடமாட்டார்கள். இப்படிப்பட்ட  கொடுமைகளோடு படித்த போதும்,  அம்பேத்கரின் கல்வித் திறமையைக் கண்டு வியந்த பிராமண ஆசிரியரான கிருஷ்ண மகாதேவ் அம்பேத்கர் பீமாராவ் இராம்ஜி மீது சாதி வித்தியாசம் பார்க்காமல், அன்பு செலுத்தி அவரது கல்விக்கு ஆதரவாக இருந்தார். அவரது அன்பில் நெகிழ்ந்த பீமாராவ் இராம்ஜி என்ற தனது பெயருக்கு பின்னால் ஆசிரியரின் பெயரான அம்பேத்கரையும் சேர்த்து கொண்டார்.


அம்பேத்கர் தத்துவம் ambedkar quotes in tamil


"ஒருவன் தான் அடிமைப்பட்டு உள்ளதை உணர்ந்தாலே போதும், அவன் மீண்டு எழுந்து விடுவான்."


"கடவுளுக்கு காணிக்கையாக கொடுக்கும் காசை, உன் பிள்ளையின் கல்விக்கு செலவிடு."


"தனக்கு அநீதி இழைக்கப்பட்டதை உணரக்கூட முடியாதவன் மனிதனே அல்ல."


"உன்னை ஒருவன் அவனது  அடிமை என்று நினைத்தால், நீ அவனை அழிக்கும் ஆயுதமாக மாற வேண்டும்."


"சாதி அமைப்பு என்பது, ஒரு இனத்தை பிரிக்கும் மாய வார்த்தை"


"ஒரு மதம் விலங்குகளை தொடுவதை புனிதமாகவும், மனிதர்களை தொடுவதை தீட்டாகவும் கருதினால் அது மதம் அல்ல."


"அறிவு, நன்னடத்தை, சுயமாரியாதை இம்மூன்று மட்டுமே ஒருவர் வணங்க வேண்டிய தெய்வங்கள்."


"தலைவிதி என்ற எண்ணமே தாழ்த்தப்பட்டவர்களின் உணர்வை மரத்து போக செய்வது."


"எதிர்ப்பு தெரிவிக்காத ஆடுகளையே கோவில்களில் பலி கொடுப்பார்கள். சிங்கங்களை அல்ல. தாழ்த்தப்பட்டவன் சிங்கமாக மாற வேண்டும்."


"மற்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தால்தான் உனக்கு நல்லவன் என்று பெயர் கிடைக்குமென்றால் அந்த பெயர் உனக்கு தேவையில்லை."


"வெற்றியோ, தோல்வியோ, திட்டோ,  பாராட்டோ, எதையும் கவலைப்படாமல் ஒருவன்  கடமையை செய்தால்,  அவனது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது, எதிரியும் அவனை  மதிக்க தொடங்குவான்."


"சக மனிதனை தொடக்கூட உரிமை இல்லாத போது, இந்தியா என் தாய்நாடு என்று எப்படி சொல்ல முடியும்?"


"மனிதனுக்கு மனிதன் சரியான உறவு கொள்வதை தடுக்கின்ற எந்த ஒரு மதமும் மதமே அல்ல. அது அடுக்குமுறையின் அடையாளமே"


"என்னை கடவுள் ஆக்காதே தோற்றுவிடுவாய். என்னை ஆயுதமாக்கு!"


"இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இது பல இனக்குழுக்களின் தேசம். அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வகுடியான தமிழர்களே கொண்டாட முடியும்"


"சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்"


"தன்னை உயர்ந்தவனாகவும் இன்னொருவனை தாழ்ந்தவனாகவும் கருதுபவன் மனிதன் அல்ல, மனநோயாளி!"


அம்பேத்கர் தத்துவம் படங்கள் ambedkar quotes in tamil


அம்பேத்கர் தத்துவம் ambedkar quotes in tamil

அம்பேத்கர் தத்துவம் ambedkar quotes in tamil

அம்பேத்கர் தத்துவம் ambedkar quotes in tamil

அம்பேத்கர் தத்துவம் ambedkar quotes in tamil

அம்பேத்கர் தத்துவம் ambedkar quotes in tamil


சிறப்பு - அம்பேத்கர் தத்துவம் ambedkar quotes in tamil


அம்பேத்கார் பெயரில் இந்தியாவில் நான்கு விமான நிலையங்கள் உள்ளன.


அம்பேத்கார் பெயரால் நான்கு உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன.


நான்கு பெரிய நகரங்களுக்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


அம்பேத்கார் பிறந்த நாள் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அம்பேத்கார் பெயரில் இந்தியா முழுவதும் ஒன்பது அரசு மருத்துவமனைகள் உள்ளன.


எட்டு இடங்களில் அம்பேத்கர் பெயரில் அருங்காட்சியகங்கள், பூங்காக்கள் உள்ளன.


ஆறு முக்கிய நகரங்களில் அம்பேத்கர் சிலைகள் உள்ளன.


ஆறு இடங்களில் அம்பேத்கர் பெயரில் பெரும் மைதானங்கள் உள்ளன.


பதினோரு கட்சிகள் மற்றும் அமைப்புகள் அம்பேத்கர் பெயரில் செயல்படுகின்றன.


சிறுவயதில் கல்வி மறுக்கப்பட்ட அம்பேத்கர் பெயரால் பதிமூன்று கல்வியல் பல்கலைக் கழகங்கள் இயங்குகின்றன.


கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்தியா முழுவதும் 22 இடங்களில் செயல்படுகிறது.


பாபா சாஹிப் அம்பேத்கருக்கு இந்திய அரசு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவை 1980ல்  வழங்கியது.


> பௌத்தத்தை நோக்கி அம்பேத்கரும் காந்தியடிகளும்


1 Comments

  1. மார்க்சியன்April 12, 2022 at 6:45 PM

    தொகுப்புக்கு மிக்க நன்றி

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு