Trending

என் மணமகள் - காதல் கவிதை

என் மணமகள் - காதல் கவிதை

காதல் கவிதைகள்


செக்கச் செவந்தவளே!

செங்கரும்பாய் இனிப்பவளே!

செந்தமிழும் உனை பாட - தினம்

சேவை செய்வேன் உனக்காக!

அல்லி மலர் போல அழகாக சிரிப்பவளே!

எள்ளி நகையாடி என் இதயம் 

பறித்தது ஏன்?

மேகச்சாரலிலே மேனியை நீ நனைப்பவளே!

மோகச்சாரலிலே முழுவதுமாக நனைத்திடவே!

அழைக்கிறேன் வருவாயா?

என் கண்மனியே….


அழகிய முகம் ஒன்றை அண்மையில் கண்டேன்!

மனம் ஆசை கொண்டும் அமைதியாய் நின்றேன்!

பேச நினைக்கையில் வார்த்தைகள் மறந்தேன்!

அவள் பேச பேச தன்நிலை இழந்தேன்!

அருகினில் சென்று அறிமுகமானேன்!

அவள் அழகிய சிரிப்பி்ல் 

சிதைந்து போனேன்!

அட்சதை தூவி அணைத்துக்கொள்ள!

என் இதயம் கூட என்னிடம் சொல்ல!

மனமில்லாமல் விட்டு வந்தேன்

என் மணமகள் அவளை 

நானும் தானே….


தேவகுமார், திண்டிவனம்


தென்றல் இதழில் கவிதை/கட்டுரை வெளியிட இங்கே தொடவும்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு