Trending

வழு கவிதை - தீசன்

 

வழு கவிதை - தீசன்

அப்பா இல்லா அவனது

அம்மா வந்தான்

கருநிலா அன்று,

கண்ணுக்குத் தெரியவில்லை

சோற்றையே நிலாவென

காட்டி ஊட்டினான்

வாலைக் குலைத்து

அதுவும் வந்தார்

'அம்மா தம்பி' 

சொன்னான் சிறுவன்

மூவனும் வீட்டின்

முன்பக்கம் போயினர்

வானத்து வெறுமை

பார்த்தனர்

அவ்விடம் இரண்டு

குடிமகன் வந்தது

ஒன்றின் கைலி கழண்டது

கையில் உள்ள பாட்டிலை உடைத்து 

கெட்ட வார்த்தை பேசின இரண்டும்

காவல் அதுவோ அவை முன் சென்றார்

பல்கூர்நாயை பார்த்தன அதுக்கள்

கைலி உள்ளது கையை ஓங்கிற்று

பதிலுக்கு நாயும் உறுமிற்று

வந்தது இரண்டும் சென்றன பயந்து

சிறுவன் சிரித்தாள் நயந்து

எதிர்வீட்டுக்காரர் இவை எல்லாம் கண்டான்

மனைவிடம் சென்று எதிரில் யார்? என்றான்

'ஒரு அம்மா நிக்கும் தெரியும்'

'ஒரு பிள்ளை இருக்கு கேட்கும்'

'நாயும் அடிக்கடி கத்தும்'

'அவ்வளோ தான் எனக்கு தெரியும்'

ஐயத்தை அறுப்பாள் தையல்


தீசன்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு