Trending

ஜீவகாருண்ய ஒழுக்கம் - நூல் வெளியீடு


வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் இந்நூல் கிடைத்தற்கு மிகவும் அரிது. இதில் ஜீவகாருண்யத்தை உலகோர்க்கு எடுத்து சொன்ன வள்ளல் பெருமானார் அதை எவ்வாறு கடைப்பிடிப்பதென்பதையும் அதன் நெறியும் ஆழ் ஞானத்தையும் உரையாக விளக்கக் கூறுகிறார்.


தென்றல் இதழ் இந்நூலை அனைத்து மக்களும் படிக்கும் வண்ணம் இணையத்தில் நூலாக வெளியிட்டுள்ளது. வள்ளல் பெருமானார் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோலென்றும் அதன் பேறென்பதே உலகோர் தேகத்தை ஆலயமாக எண்ணி அவர்களின் குறைகளை இயன்றவகையில் தீர்பதுவும் எல்லா உயிரும் இன்புற்று வாழ்தலையே தனது சுகமாக கொள்ள வேண்டும் என்பதையும் இறை வழிபாட்டிற்கு நிகராக வலியுறுத்துகிறார்.


அதன்வகையில் இந்நூலினால் கிடைக்கும் தொகையானது மக்களின் பசிப்பிணி தீர்க்கும் பொருட்டு இன்றளவும் இயங்கும் வள்ளல் பெருமானின் சத்திய தரும சாலைக்கு அனுப்பி வைக்கப்படும்.


அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ்ஜோதி


என்றும் வள்ளலார் வழியில்,

தீசன்

1 Comments

  1. நல்ல முயற்சி வாழ்த்துகள்

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு