Trending

அப்துல் கலாம் சொன்ன உலகை அமைதியாக்கும் 3 வழி

அமைதிக்கு வழி


abdul kalam 3 vision


மனித பரிணாமம் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. புது புது கண்டுபிடிப்புகள் செய்வதிலும் ஏகபோக வளர்ச்சி. இருப்பினும் நாடுகளுக்கிடையேயான யுத்தமும், நாடுகளுக்கு உள்ளே ஏற்படும் மதம், குழு ரீதியான யுத்தங்களும் வன்முறைகளும் இன்றளவும் குறைந்தபாடில்லை…


காந்தி குறைந்த அளவே நூல்கள் படித்திருந்தாலும், பல தரப்பட்ட ஏழை எளிய மக்களை சந்தித்து அவர்களை அதிகம் படித்தார். இந்திய நாட்டின் பொருளாதாரம் வளர அடித்தளம், ஏழை எளிய மக்களே என்று தனது கிராமராஜியத்தை கட்டமைக்க நினைத்தார். பொருள் சார்ந்த வாழ்க்கை இல்லாது மானுடம் சார்ந்த வாழ்க்கை அமையவேண்டும் என்றும் பொருள் சார்ந்த வாழ்க்கை இயற்கையை அழித்து மானுடத்துக்கே சங்கடத்தை அதிகரிக்கும் என்று கூறினார். 


அது போல தான் கண்டுபிடிப்புகள் அதிகரிக்க போர்களும் அதிகரிக்கிறது. அதனால் கண்டுபிடிப்புகளை நிறுத்த முடியாது. அது இன்றைய காலத்துக்கு அவசியம். அதை கருத்தில் கொண்டு தான் மேதகு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்த பூமி கிரகம் யுத்தமின்றி அமைதியுடன் வாழ, மைசூரில் நடந்த மாநாட்டில் மூன்று அறிவுசார் கருத்தை கூறினார். அவற்றை பேசும் முன்   முதலில் மன‌ஒற்றுமை பேசினார்.


ஒருமுறை அவர் அருணாச்சலப் பிரதேசத்திற்கு சென்று, அங்கு டவாங் என்னும் இடத்தில் உள்ள புத்த மடாலயத்திற்குச் சென்றார். கடுமையான குளிர் வீசும் இந்த பிரதேசத்தில் அனுபவம் வாய்ந்தோரும் இளைஞர்கள் அனைவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அமைதியான முறையில் வாழ்க்கையை நடத்துக்கின்ற தனித்துவமான சூழல் கண்டிருக்கிறார். இங்கு என்ன சிறப்பான விசயம் என்று தன்னை தானே கேட்டுக் கொண்டாராம். இது மக்களையும் துறவிகளையும் தாங்களாகவே சாமாதானமாக இருக்க வைக்கிறது என்று தேன்றியதாம். பின் நேரம் வந்ததும் தலைமை துறவியிடம் 'டவாங் கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் எப்படி  சமாதானமான மற்றும் மகிழ்ச்சியான சூழல் எல்லோராலும் வெளிபடுத்த முடிகிறது?' என்று கேட்டார்.


துறவி: 'நீங்கள் தான் நாட்டுக்கே ஜனாதிபதி ஆயிற்றே! எங்களை பற்றி தாங்கள் அறிந்திருப்பீர்கள்' என்று சிரித்தபடியே கூற, கலாம் மீண்டும் இது எனக்கு ஒர் முக்கியமான பகுப்பாய்வு என வேண்டி கேட்டார்.  உடனே தலைமை துறவி நூறுக்கும் மேற்பட்ட இளம் துறவிகளின் நடுவே அமர்ந்து ஒர் சிறு சொற்பொழிவை ஆற்றினார். 


தலைமை துறவி: "தற்போதைய உலகில் நம்பிக்கையின்மை, மகிழ்ச்சியின்மை வன்முறையாக மாறுகிறது. நீங்கள்- நான், எனது என்ற சிந்தனையை மனதில் இருந்து நீக்கும் போது, நீங்கள் ஈகோவை அகற்றுவீர்கள்; அகந்தையை விட்டொழித்தால், சக மனிதர்கள் மீதான வெறுப்பு நீங்கும்; வெறுப்பு நம் மனதில் இருந்து வெளியேறினால், சிந்தனையிலும் செயலிலும் உள்ள வன்முறை மறைந்துவிடும்; நம் மனதில் உள்ள வன்முறை அகற்றினால், மனித மனங்களில் அமைதி பிறக்கும். அப்போதுதான் சமுதாயத்தில் அமைதி மலரும்" என்றார்.


கலாமின் கனவான அமைதியான மற்றும் வளமான சமுதாயத்தை உருவாக்குவதில் ஒர் பங்கு பதில் கிடைத்ததாக நினைத்தார். இந்த டவாங் அனுபவத்தை கிறிஸ்தவ துறவிகளிடம் கலந்துரையாடினார் 'மன்னிப்பு என்பது நல்ல வாழ்க்கையின் அடித்தளம்' என்று அந்த துறவிகள் கூறினர். பின்னர் விவேகானந்தர் பிறந்த இடத்தில் சீடர்களிடம் டவாங் சம்பவத்தை பற்றி கலந்துரையாடினர் அவர்களும் அந்த அனுபவம் அழகாக இருப்பதாக கூறினர்‌. வெள்ளி கிழமை நமாஸில் அஜ்மீர் ஷெரிப்பை பார்வையிட்டார். ஷைத்தானின் மற்றொரு சக்திவாய்ந்த படைப்பின் மூலம் சர்வவல்லமையுள்ள மனிதனின் படைப்பு சவால் செய்யப்பட்டுள்ளது என்று சூஃபி நிபுணர் கூறினார். நல்ல செயல்கள் மட்டுமே நல்ல சிந்தனைக்கு வழிவகுக்கும்,நல்ல சிந்தனை இறைவனின் கட்டளைப்படி விளைகிறது.


பல்வேறு ஆன்மீக ஆளுமைகளுடனான தொடர்பு அவருக்கு ஒர் மன ஒற்றுமை அடையக்கூடியதாக இருந்தது. மதம் ஆன்மீக பாலமாகி அனைவரையும் ஒன்றினைப்பதாக இருப்பதாக அவர் நினைத்தார்.


பின்னர், 'அறிவொளி பெற்ற குடிமகனின் பரிணாமம்' என்ற தலைப்பில் முப்பரிமாண மூன்று அறிவுசார் கருத்தை பேசத் தொடங்கினார்.


  1. மதிப்பு அமைப்புடன் கூடிய கல்வி

  2. மதம் ஆன்மீகமாக மாறுதல்

  3. சமூக மாற்றத்திற்கான பொருளாதார மேம்பாடு

1.மதிப்பு அமைப்புடன் கூடிய கல்வி


முதன்மையான கல்வி ஐந்து வயது முதல் பதினேழு வயது வரை இருக்க வேண்டும். அது நேர்மையை வளக்கும் வகையில், மதிப்பு முறையுடன் அமைய வேண்டும் என்கிறார். பெற்றோர்களும் ஆசிரியர்களும் இரண்டு விதமான தார்மீக (தர்ம்ம் மிகுந்த) தலைமைத்துவத்தை குழந்தைகளிடையே வளர்க்க வேண்டும். முதலாவதாக, மனித மேம்பாட்டிற்கான கட்டாய மற்றும் சக்திவாய்ந்த கனவுகள் அல்லது தரிசனங்களைக் கொண்ட திறன். இரண்டாவதாக, தார்மீக தலைமைக்கு சரியானதை செய்வதற்கும் மற்றவரை நல்ல முறையில் வழிநடத்துவதற்கும் ஒரு மனோபாவம் தேவை.  இந்த காலத்தில் வாரம் ஒருமுறை ஒருமணி நேரமாவது அறநெறி அறிவியல் வகுப்பை நடத்த வேண்டும். இரண்டு ஆண்டுகள் ராணுவ பயிற்சியும் அவசியம். அது இளம் மனதை உயர்த்துவதோடு நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் என்று மேதகு கூறுகிறார்


2.மதம் ஆன்மீகமாக மாறுகிறது


மதம் அனைவரையும் இணைக்கும் ஒர் பாலமாக உள்ளது என்று அப்துல் கலாம் கூறுகிறார். அது ஆன்மீகமாக மாறுகிறது என்பதை அவர் வாழ்கையில் கண்ட நிகழ்சியை கூறி விளக்குகிறார். அதை அவர் மொழி வழியே தருகிறேன்.


"நான்கு தசாப்தங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூற விரும்புகிறேன். பேராசிரியர் விக்ரம் சாராபாய் இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் தொலைநோக்கு பார்வை உடையவர். பேராசிரியர் விக்ரம் சாராபாய் பூமத்திய ரேகைப் பகுதியில் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை நிறுவ ஒரு இடத்தைத் தேடிக்கொண்டிருந்தார். தென்னிந்தியாவில் உள்ள தும்பா விண்வெளி ஆராய்ச்சிக்காக விஞ்ஞான சமூகத்தால் பல தளங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. பேராசிரியர் விக்ரம் சாராபாய் தும்பாவுக்குச் சென்றபோது, ​​அந்த வட்டாரத்தில் தொடர் கிராமங்கள் இருந்தன, ஆயிரக்கணக்கான மீனவர்கள் அந்தப் பகுதியில் வசித்து வந்தனர். இது ஒரு அழகான பழங்கால தேவாலயம், செயின்ட் மேரி மாக்டலீன் தேவாலயம், பள்ளித்துரா மற்றும் ஒரு பிஷப் ஹவுஸையும் கொண்டிருந்தது. பேராசிரியர் விக்ரம் சாராபாய் விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி பணிக்கான இடத்தைப் பெறுவதற்காக பல அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்தார். அந்த இடத்தின் தன்மையால் அது மேலும் நகரவில்லை. திருவனந்தபுரம் பிஷப் 1962 இல், ரெவ் ஃபாதர் டாக்டர் பீட்டர் பெர்னார்ட் பெரேராவைப் பார்க்கும்படி அவர் கேட்கப்பட்டார். ஒரு சனிக்கிழமை அன்று பேராசிரியர் விக்ரம் சாராபாய் பிஷப்பை சந்தித்தார். பிஷப் சிரித்துக்கொண்டே அவரை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை சந்திக்கும்படி கூறினார். தேவாலய சேவை முடிந்து காலையில், பிஷப் சபையில் கூறினார், "என் குழந்தைகளே, என்னுடன் ஒரு பிரபலமான விஞ்ஞானி இருக்கிறார், அவர் விண்வெளி அறிவியல் ஆராய்ச்சிக்காக எங்கள் தேவாலயத்தையும் நான் வசிக்கும் இடத்தையும் விரும்புகிறார். அன்பான குழந்தைகளே, விஞ்ஞானம் நியாயப்படுத்துவதன் மூலம் உண்மையைத் தேடுகிறது. ஒரு விதத்தில், அறிவியலும் ஆன்மீகமும் மக்களுக்கு நல்லது செய்வதற்கு ஒரே தெய்வீக ஆசீர்வாதத்தை நாடுகின்றன. என் குழந்தைகளே, அறிவியல் பணிக்காக கடவுளின் இருப்பிடத்தை நாம் கொடுக்க முடியுமா?" சபையில் இருந்து 'ஆமென்' என்ற கோரஸ் ஒலித்தது, முழு தேவாலயமும் எதிரொலித்தது. அதைத் தொடர்ந்து, 1962-ல் பெரிய நிகழ்ச்சி நடந்தது. திருவனந்தபுரம் பிஷப் ரெவ் டாக்டர் பீட்டர் பெர்னார்ட் பெரேரா, பள்ளித்துரா, தும்பாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவுவதற்கான தேசிய இலக்கை அங்கீகரிப்பதற்காக தேவாலயத்தை அர்ப்பணிக்க உன்னதமான முடிவை எடுத்தார். அந்த தேவாலயத்தில்தான் நாங்கள் எங்கள் வடிவமைப்பு மையத்தை வைத்திருந்தோம், ராக்கெட் அசெம்பிளியை ஆரம்பித்தோம், பிஷப் இல்லம் எங்கள் விஞ்ஞானிகளின் இடமாக இருந்தது. பின்னர், தும்பா பூமத்திய ரேகை ஏவுதளம் (TERLS) விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) மற்றும் நாடு முழுவதும் பல விண்வெளி மையங்களை நிறுவ வழிவகுத்தது.


இந்த நிகழ்வை நான் நினைக்கும் போது, ​​அறிவொளி பெற்ற ஆன்மீக மற்றும் அறிவியல் தலைவர்கள், மனித வாழ்க்கைக்கு மரியாதை கொடுப்பதில் எவ்வாறு ஒன்றிணைகிறார்கள் என்பதை என்னால் பார்க்க முடிகிறது. புதிய தேவாலயமும் புதிய பள்ளிகளும் சாதனை நேரத்தில் நிறுவப்பட்டன. நிச்சயமாக TERLS மற்றும் பின்னர் VSSC இன் பிறப்பு ஏவுகணை வாகனங்கள், விண்கலங்கள் மற்றும் பயன்பாடுகளுக்கான திறனை நாட்டிற்கு வழங்கியது. இன்றைக்கு நம்மிடையே பேராசிரியர் விக்ரம் சாராபாய் இல்லை, ரெவ டாக்டர் பீட்டர் பெர்னார்ட் பெரேரா இல்லை, ஆனால் படைப்புக்கும், மலரை மலரச் செய்வதற்கும் பொறுப்பாளிகள் பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ளபடி வேறு வகையான மலராக இருப்பார்கள். பூவைப் பாருங்கள், அது எவ்வளவு தாராளமாக வாசனை திரவியத்தையும் தேனையும் விநியோகிக்கிறது, அது அனைவருக்கும் கொடுக்கிறது, தனது அன்பை இலவசமாக அளிக்கிறது, அதன் வேலை முடிந்ததும், அது அமைதியாக கீழே விழுகிறது, பூவைப் போல இருக்க முயற்சி செய்யுங்கள், அதன் அனைத்து குணங்கள் இருந்தும் அடக்கமுடன்"


3.நமது தேசத்தை பொருளாதார ரீதியில் வளர்ந்த தேசமாக மாற்றுதல்


பொருளாதார ரீதியில் நம் நாடு முன்னேற விவசாயத்தில் இருந்தே தனது யோசனையை தொடங்குகிறார். காந்தியின் ராஜியமான கிராமத்தை கூறிவைத்தே செயல்படுத்த வேண்டும் என்கிறார்.


  1. விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல்.

  2. கல்வி மற்றும் சுகாதாரம்

  3. தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் வளர்ச்சி

  4. மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்ற உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கிராமப்புறங்களில் நகர்புற வசதிகளை வழங்குதல் மற்றும் PURA திட்டத்தை கிராமம் வரை கொண்டு செல்லுதல்


முக்கியமான தொழில்நுட்பங்களில் தன்னம்பிக்கை. இந்த ஐந்து பகுதிகளும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு உடையவை. தனிப்பட்ட மாநிலங்களின் முக்கிய திறன் மற்றும் அறிவு நிறுவனங்களின் கூட்டாண்மை பயன்படுத்தி, திட்டமிட்டபடி வளரும் மாநிலத்தை வளர்ந்த மாநிலமாக மாற்றுவது நிச்சயமாக சாத்தியமாகும்.


கிராம புறங்களை நகர் புறமாக மாற்றும் கலாமின் கனவு திட்டமான PURA எல்லா கிராமபுறத்திலும் அமைய வேண்டும் என்கிறார். ஒரு கிராமத்தில் நல்ல குடிநீர், நல்ல கல்வி, நல்ல மருத்துவம், நல்ல இணைய போக்குவரத்து, சூரிய ஒளி, காற்று , உயிர் எரிபொருள் மற்றும் நகராட்சிக் கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல். கைவினை திறன் மேம்பாடு, வேளாண் செயலாக்கம்,  ஆகியவை அமைந்தாலே நம் நாடு வளர்ந்த நாடாக ஆகிவிடும்.


PURA ஆனது வேலைவாய்ப்பை அதிகரிக்கும் ஒர் வளர்ச்சி திட்டத்தை தருகிறது. நம் நாட்டில் பல புரா நிறுவனங்கள் உள்ளது. அவை மூலம் கிராமங்களை ஒன்றினைந்து அனைத்து சேவையையும் எளிதாக வழங்க முடியும் என்கிறார்.


மதிப்பு அடிப்படையிலான கல்வி, மதம் ஆன்மீக சக்தியாக மாறுதல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அனைத்து மக்களையும் சென்றடையும் என்ற முப்பரிமாண திட்டம், அமைதியான சமுதாயதின் பரிணாம வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அத்தகைய சமுதாயம் அமைய மன ஒற்றுமை ஒரு முன் தேவை என்று தனது உரையை நிறைவு செய்தார்.


'யுத்தம் நீக்க வந்த மெத்தப் படித்த பொறியாளன்'  கலாம் அவர்களின் ஆசை படி இனியே நம் பூமி கிரகம் அமைய அவர் மொழி வழியே நம் அனைவருக்கும் நடைபோட விரும்புகிறேன்...


-குகன்


 இந்த வார தென்றலை பெற

 இங்கே தொடவும்

2 Comments

  1. கலாம் ஐயா கூறிய இந்த கருத்து காணொலியாகவும் பிற ஆங்கில கட்டுரையாகவுமே இணையத்திலுள்ளதே தவிர இது போன்ற தூய விளக்கத்தோடு தமிழில் இல்லவே இல்லை. அதை தென்றல் தான் முதன் முதலில் தமிழில் வெளியிட்டிருக்கிறது என்பதையும் குகன் கலாமின் கருத்தை கசடுகள் இல்லாமல் அப்படியே தந்துள்ளார் என்பதையும் அறியும் போது... குகனை பாரட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை

    இது போன்ற கட்டுரைகளை நான் மேலும் எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  2. நேரம் போதவில்லை.இப்போதுதான் படித்தேன்.கலாமை காட்சிபடுத்தியமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு