Trending

காந்தியடிகளின் பொன்மொழிகள்

 

காந்தியடிகளின் பொன்மொழிகள்

"தீமை வேறு; தீமை செய்தவன் வேறு இதை வேறுபடுத்தி அறிந்து கொள்ள ஒருபோதும் தவறக்கூடாது"


"எல்லோரையும் கெட்டவர் என்று சொல்பவன் நல்லவனாக இருப்பான் என்று சொல்லமுடியாது"


"தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் உண்மையான தியாகியாக இருக்க முடியாது"


"பயம் இறைவனை அறிய தடை போடுகிறது"


"கண் பார்வை இல்லாதவன் எல்லாம் குருடன் அல்ல. எவன் தன் குற்றத்தை உணராமல் அதே குற்றத்தை தொடர்கிறானோ அவனே குருடன்"


"சில அறங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அஹிம்சையும் ஒன்று"


"எல்லா மாணவனுக்கும் சிறந்த புத்தகம் அவனது ஆசிரியரே ஆவார்"


"உலகத்தை மாற்ற விரும்பினால், முதலில் உன்னை மாற்று"


"கடவுள் விண்ணுலுமில்லை மண்ணிலுமில்லை. நீ இன்னொருவருக்கு செய்யும் சேவையில் இருக்கிறார்."


"உண்மையை மறைக்காது சொல்லும் மனத்திடம் உள்ளவனே தைரியசாலி"


"பெண்களால் அன்பினை பிரித்து பார்க்க முடிவதில்லை. பெருக்கத்தான் முடியும்"


"தெய்வத்தை பற்றி பேசி என்ன பயன்? ஏழை மக்களுக்கு தேவையானது உணவு மட்டுமே"


"தவறு செய்துவிட்டு அதை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் இருக்காது"


"துன்பத்தை ஏற்றுக் கொள்ள பழகு, அதுவே உன்னை சூரியனுக்கு நிகரானவனாக்கும்"


"பொறுமையை இழப்பவன் போர்களில் தோற்கிறான்"


"வலிமை என்பது உடல் பலத்தால் வருவது அல்ல மனோ பலத்தால் வளர்வது"


"கூட்டத்தில் நிற்பது சுலபம்; தனியே நிற்பதற்கு தைரியம் வேண்டும்"


"எதிர்காலம் இன்றைய உன்னில் இருந்து முளைக்கின்றது"


"உண்மையான அமைதியை இந்த உலகத்தில் உண்டாக்க வேண்டுமானால், நாம் இப்போதே குழந்தைகளுக்கு நல்ல கல்வியை தந்தாக வேண்டும்"


"முதலில் உன்னை அலட்சியம் செய்வார்கள், அடுத்து உன்னை கண்டு சிரிப்பார்கள், அடுத்து உன்னை எதிர்பார்கள் அதில் நீ வெல்வாய்"


"மகிழ்ச்சி என்பது அமைதிக்காக நாம் என்ன செய்கிறோம் என்பதில் தான் உள்ளது"


"கோபத்திற்கான சரியான விடை அமைதியிலே உள்ளது"


"மனிதவர்க்கத்தின் தலைசிறந்த ஆயுதம் அமைதியே ஆகும்"


"கண்ணுக்கு கண் என்று முடிவடையும் போர் மொத்த மனித குலத்தையும் குருடர்கள் ஆக்கும்"


"கடவுள் மதங்களில் இல்லை; கடவுளைக்கு மதமே இல்லை"


"நீ சிறுபான்மையாக இருக்கலாம், ஆனால் உண்மை எப்போதும் உண்மையே"

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு