Trending

தினமலர் டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டி 2022

 

தினமலர் டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டி 2022

தினமலர் நிறுவனர் டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டி மூலம் உங்களை எழுத்தாளராக்கி, இலக்கிய உலகில் வலம் வரச் செய்யும் பணியை தினமலர் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகிறது. 

ரூ. 60,000 பரிசுடன் இந்த ஆண்டுக்கான போட்டி தொடங்கிவிட்டது. உங்கள் கற்பனை திறனில் உருவாகும் சிறுகதைகள், எந்த துறை சார்ந்ததாகவும் இருக்கலாம். அதில் உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. உங்களின் படைப்புத் திறனுக்கு தக்க பரிசுகள் காத்திருக்கின்றன.

நிபந்தனைகள்

  • நீங்கள் எழுதும் சிறுகதை, இதுவரை வெளிவராத படைப்பாக, சொந்த கற்பனையாக இருக்க வேண்டும். 
  • வேற்று மொழிக்கதைகளை மொழிபெயர்த்து அனுப்பக்கூடாது. 
  • போட்டிக்கான சிறுகதைகளை டைப் செய்து, ஏ4 அளவில் 3 பக்க அளவில் பிரின்ட் எடுத்து அனுப்ப வேண்டும் . 
  • ஒரு தாளின், ஒருபக்கம் மட்டுமே பிரிண்ட் செய்திருக்க வேண்டும். 
  • ஒவ்வொரு கதை தாளின் பின்புறமும், உங்கள் பெயர், முகவரி, அலைபேசி எண் கட்டாயம் எழுத வேண்டும். 
  • முகவரிகள் குறிப்பிடப்படாத கதைகள் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. 
  • போட்டிக்கான சிறுகதைகளை நடுவர் குழு பரிசீலிக்கும். 
  • பொறுப்பாசிரியரின் தீர்ப்பே இறுதியானது 
  • இதற்கு முன்பு நடந்த டிவிஆர் சிறுகதை போட்டிகளில், முதல் 3 இடங்கள் பெற்றவர்கள் இந்த போட்டியில் பங்கேற்பதை தவிர்க்கலாம்.

சிறுகதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 18.8.2022

முடிவு வெளியாகும் நாள்: 02.10.2022

அனுப்ப வேண்டிய முகவரி

டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டி 2022,
தினமலர்,
57, பாந்தியன் சாலை, எழும்பூர்,
சென்னை 600008,
044 28414121, 31

இமெயில் முகவரியில் அனுப்ப

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு