Trending

அன்னையர் தின வாழ்த்துக்கள் கவிதை

கவிதை மட்டும் காண

 

அன்னையர் தின வாழ்த்துக்கள் கவிதை


இறைவன் தனக்கு தானே ஒரு பெயரை சூட்டி கொள்வான் என்றால் அதை 'அம்மா' என்றே வைத்து கொள்வான். உலகில் அனைவோரும் பிறப்பெடுப்பது பெண்ணாலே அவளது தாய்மையே நம்மை மனிதராக்குகிறது மனிதத்தை விதைக்கிறது. உலக உயிர்களின் அனைத்திலும் தாய்மை ஓர் உயர்ந்த அம்சமாகும். அவ்வம்சம் பெண்களுக்கு உடலாலும் உள்ளத்தாலும் வாய்க்கப்பெற்றுள்ளது. அதை அனைத்து பிள்ளைகளும் வணங்குவோமாக. தாய்மை உள்ளம் படைத்த அனைவோர்க்கும் 'அன்னையர் தின நல்வாழ்த்துகள்'


இந்த அன்னையர் தினம் மே 8, 2022 அன்று உலகளாவிய தாய்மை உள்ளம் படைத்த பெண்களுக்கு அன்னையர் தின வாழ்த்து சொல்வதற்காக தென்றல் இதழ் அன்னையர் தின வாழ்த்துக்கள் கவிதையினை தொகுத்து உள்ளது. வாசகர்கள் பயன்படுத்தி கொள்ளவும்


தரவிறக்கும் முறை


அன்னையர் தின வாழ்த்துகள் கவிதை படங்களை தரவிறக்கம் செய்ய கீழே இருக்கும் DOWNLOAD பொத்தானை அழுத்தி படத்தினை Long Press செய்யவும். பின் படத்தினை download செய்துகொள்ளலாம்


அன்னையர் தின வாழ்த்துக்கள் கவிதை படங்கள்

அன்னையர் தின வாழ்த்துக்கள் கவிதை

படிக்காதவள்,
எவராலும்
படிக்க 
முடியாதவள்
என்
அம்மா


அன்னையர் தின வாழ்த்துக்கள் கவிதை

என்றும்
என்னை
குழந்தையாக
காணும்
குழந்தையே
அன்னை


அன்னையர் தின வாழ்த்துக்கள் கவிதை

கவிதை
எழுத
தெரியாதவருக்கும்
தெரிந்த
ஒரே
கவிதை
அம்மா


அன்னையர் தின வாழ்த்துக்கள் கவிதை

அனாதையான
உணர்வுக்கு
அம்மாவே
அருமருந்து


அன்னையர் தின வாழ்த்துக்கள் கவிதை

இறைவன்
தனக்கொரு
பெயர்
கொண்டால்
தாய்
என்பான்


அன்னையர் தின வாழ்த்துக்கள் கவிதை

இருப்பவன்
தொலைப்பதும்
இழந்தவன்
தேடுவதும்
தாயின்
அன்பையே


அன்னையர் தின வாழ்த்துக்கள் கவிதை

நான்
என்பதே
பன்மையாகிறது
தாயின்
முன்னால்


அன்னையர் தின வாழ்த்துக்கள் கவிதை

உயிரும்
மெய்யும்
உயிர்மெய்யும்
கலந்ததே
அம்மா-வில்
தான்


அன்னையர் தின வாழ்த்துக்கள் கவிதை

எனக்காக
செலவான
உன்
வயதை
மீட்பது
எவ்வாறு
அம்மா?



கவிதை மட்டும் காண

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு