முன்பு என் பெயருக்கு திரும்பாதவன்
இன்று உன் பெயருக்கும் சேர்த்து
திரும்புகிறேன்
💓 ❤️ ❤️ ❤️ 💓
கண்ணாடியில்
எனக்கு மட்டும்
இரண்டு முகங்கள்
உன்னையும் சேர்த்து
💓 ❤️ ❤️ ❤️ 💓
உன் முகம் மட்டும்
மறந்து விடுகின்றது எனக்கு
மீண்டும் மீண்டும் பார்ப்பதற்காக
💓 ❤️ ❤️ ❤️ 💓
நீ வருகிறேன் என்று சொன்னவுடன்
என்னையும் அறியாமலேயே
சிரித்துவிடுகிறேன்
சிரிப்புக்கு அர்த்தம்
உன்னிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று
💓 ❤️ ❤️ ❤️ 💓
செலவிட முடியாத
சில்லறை
உன் சிரிப்பு
💓 ❤️ ❤️ ❤️ 💓
உன் வருகையின் நேரம் வந்தவுடன்
கடிகாரம் மணி கூட உன் பெயரை
சொல்லித்தான் அடிக்கிறது
💓 ❤️ ❤️ ❤️ 💓
உன் பின்னால் சுற்றினேன்
பைத்தியம் என்றாய் ....
உன்னை மட்டும் தான் பார்க்கிறேன்
குருடன் என்றாய்
என் காதலை சொன்னால்
காதலன் என்பாயா
💓 ❤️ ❤️ ❤️ 💓
உன் பெற்றோர் வைத்த பெயர்
ஒன்றுதானே
நான் உனக்கு ஓராயிரம்
பெயர் வைத்திருக்கிறேன்
ஏன் நான் அழைத்தால் மட்டும்
திரும்ப மறுக்கிறாய்
💓 ❤️ ❤️ ❤️ 💓
ஒருநாள் வாழ்ந்த சந்தோஷத்தில்
இறந்துவிடுகிறது உன் கூந்தல் பூக்கள்
💓 ❤️ ❤️ ❤️ 💓
நீ நடந்தால்
உன்னைப்போலவே சிணுங்கி பார்க்கின்றது
உன் வளையலும் கொலுசும்
💓 ❤️ ❤️ ❤️ 💓
அடி பைத்தியக்காரி
நான் பைத்தியக்காரன்
பைத்தியம் தான்
நான் பைத்தியம் இல்லை
என்று சொல்லும்
நான் தான்
உன்னை காதலிக்கிறேன்
என்று சொல்லி விட்டேனே
💓 ❤️ ❤️ ❤️ 💓
பிரம்மனுக்கு தெரியாமல்
பிறந்து விட்டாய்
அவன் இன்னும்
உன்னை பார்க்கவில்லை
பார்த்திருந்தால்
அவனும் பிறந்திருப்பான்
கவிஞர் ம.செ, திருச்சி
Aval peyarukkum thirumbi parkiren... ahh 🥰❤❤❤❤.. school life
ReplyDeleteAwesome lines anna.. your partner so lucky
Deleteபிரம்மனுக்கு தெரியாமல்
ReplyDeleteபிறந்து விட்டாய்
அவன் இன்னும்
உன்னை பார்க்கவில்லை
பார்த்திருந்தால்
அவனும் பிறந்திருப்பான்.
அனைத்தும் சூப்பர். கடை கவிதை சூப்பரோ சூப்பர்.
காதல் கவிதை தீட்ட விருப்பம் தான்.. காதலிக்க நேரம் தான் இல்லை
ReplyDeleteNice superb love feelings
ReplyDeleteTaking us to teenage memories
கவிஞனின் கவிதை வரிகள் காதிலிக்க வைக்கும்.... #மா.செ அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த கவிதை நாயகனே பிரம்மா தான்... ( கடைசி வரிகள்)
ReplyDeleteநல்ல கவிதை.... நிறைய எழுதுங்கள் படிக்க ஆவலாக உள்ளேன்
ReplyDelete