Trending

TNPSC GROUP 2 CUT OFF MARK 140+ இருந்தாலே போதுமா?

Tnpsc group 2 cut off


கடந்த மூன்று வருடங்களுக்கு பிறகு GROUP 2 தேர்வுகள் சென்ற ஜுன் 21 ஆம் தேதி நடைபெற்றது.

சென்ற மூன்று ஆண்டுகளில்  12 லட்சம் பேர்  கலை, அறிவியல், வணிகவியல், பொறியியல் போன்ற டிகிரி முடித்திருந்தும் 5529 பதவிகளுக்கு நடந்த இந்த தேர்வுக்கு  பதினோரு லட்சத்து எழுபத்தெட்டாயிரம் பேரே விண்ணப்பித்து இருந்தார்கள்.

அதாவது ஒரு காலியிடத்துக்கு சுமார் 200 பேர் மனு செய்திருந்தார்கள். இந்த முறை நடந்த தேர்வுக்கு காலை 9 மணிக்கு மேல் தேர்வுக்கூடத்துக்கு வந்த யாரையும் ஆணையம் அனுமதிக்கவில்லை. அதனாலோ என்னவோ, ஒரு லட்சத்து என்பதாயிரம் பேர் தேர்வு எழுதவில்லை. முடிவில் ஒன்பது லட்சத்து தொன்னூற்று ஐந்து ஆயிரம் பேரே தேர்வு எழுதினார்கள்.

இதனால் ஒரு காலி இடத்துக்கு போட்டியிடும் போட்டியாளர் எண்ணிக்கை 180 ஆக குறைந்தது.

தேர்வு எழுதி வந்தவர்கள் பெரும்பாலும் தேர்வு எளிமையாக இருந்ததாக கருத்து தெரிவித்தார்கள். ஆனால் உண்மை நிலை என்ன?

தமிழுக்காக கேட்கப்பட்ட நூறு கேள்விகள் எளிமையாக இருந்தது உண்மைதான். ஏனெனில் கேள்விகள் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்பட்டு இருந்தது. சுமார் எழுபது கேள்விகள் சுலபமாகவும், சுமார் இருபது கேள்விகள் சற்று கடினமாகவும் இருந்தது. பத்தாம் வகுப்பில் நானூற்று ஐம்பது மதிப்பெண் எடுத்த மாணவர்களால் நிச்சயம் என்பது கேள்விகள் சரியாக எழுதியிருக்க முடியும்.

கணக்கில் கேட்கப்பட்ட இருபத்தைந்து கேள்விகளில் பதினைந்து கேள்விகள் மிகவும் எளிமையாகவே இருந்தன. தனி வட்டி,கூட்டு வட்டி, விகிதங்கள், மீ சி ம, கால அளவு போன்றவை யோசிக்கவே தேவையில்லாத அளவுக்கு நேரடியாக கேட்கப்பட்டு இருந்தன. மீதமுள்ள பத்து கேள்விகளை சரியாக எழுத கொஞ்சம் சிந்தனைத் திறன் வேண்டும். வரலாறும் கூட பரவாயில்லை.

ஆனால் பொது அறிவு மற்றும் திறன் சார்ந்த கேள்விகள் யாரும் எதிர்பார்க்காத பகுதிகள் மூலமே கேட்கப்பட்டு இருந்தது.

பகுதி இரண்டில் கணக்கு தவிர கேட்கப்பட்ட எழுபத்தைந்து கேள்விகளில், சுமார் பத்து கேள்விகள் மட்டுமே பாட புத்தகம்  அடிப்படையில் கேட்கப்பட்டவை.

முந்தைய முறைப்படி குருப் 2 ஏ தேர்வுகள், மெயின் இல்லாமல் நடந்திருந்தால் 170 கேள்வி வரை சரியாக அடித்தவர்களுக்கு பணி வாய்ப்பு நேரடியாக கிடைத்திருக்கும்.

ஆனால் தற்பொழுது 1:10 என்ற விகிதத்தில் 5500 இடங்களுக்கு 55000 பேர் வரை மெயின் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளார்கள். ரிடையர்மென்ட் வயது 60 என்பதை அரசு உறுதிசெய்துவிட்டால் மேலும் 500 காலியிடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அந்த அறிவிப்பு இந்த வாரம் வெளியாகிவிடும். அப்படி பார்த்தால் அறுபது ஆயிரம் பேர் வரை மெயின் செல்ல வாய்ப்பு ஏற்படும்.

ஒரு வேளை குரூப் 2 கட் ஆஃப் மார்க் உதாரணத்துக்கு 145 என்று வைத்துக்கொள்வோம், அந்த 145 மதிப்பெண் பெற்றவர்கள் 15000 பேர் இருந்தால், மேற்படி பதினைந்தாயிரம் பேரும் மெயினுக்கு செல்வார்கள். அதனால் நம் எதிர்பார்ப்பை காட்டிலும் அதிகமாக 60000 முதல் 65000 பேர் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

2019 ஆம் ஆண்டு முதல் நேரடி வகுப்பு, மற்றும்  நேரடி தேர்வு நடைபெறாததால்,  மாணவர்களின் திறன் குறைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் பட்டம் பெற்றவர்களுக்கும் திறன் குறைவாகவே இருக்கும். அதனால் போட்டி தேர்வு பயிற்சி மையங்களில்  படிப்பவர்களே போட்டியை ஏற்படுத்துபவர்களாக உள்ளார்கள்.

பயிற்சி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களிடம் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும், கூகுல் ஃபார்ம் மூலமாகவும் தேர்வுக்கு பிறகு சர்வே எடுத்துள்ளார்கள்.

அதன் முடிவுகளை காணும்போது பொதுப் பிரிவினர் 150 கேள்விகள் சரியாக எடுத்தாலே மெயினுக்கு வர வாய்ப்புள்ளது. பிற்பட்டவர், மிக பிற்பட்டவர்,  பிற்பட்ட முஸ்லீம்கள் 140 கேள்விகள் சரியாக எழுதினாலே  உள்ளே வர வாய்ப்புள்ளது. SC ST போட்டியாளர்கள் மேலும் 10 மதிப்பெண்  குறைவாக எடுத்தாலே போதும்.

2016, 2017, 2018, 2019ஆம்  ஆண்டுகளில் குறைவான இடத்துக்கு தேர்வு நடந்ததால் (1200 to 3000) Cut off அதிகமாக இருந்தது. அதாவது(155 to 160).

பத்து லட்சம் பேர் எழுதினாலும் அதில் பாதி பேர் வேலை வாங்கிவிடவேண்டும் என்ற முனைப்போடு எழுதுபவர்கள் அல்ல. அப்பா சொன்னார் என்றும், மாமா சொன்னார் என்றும், பிரெண்டு போட்டிருக்கிறான் நாமும் போடுவோம் என்றும், பட்டம் படிச்சாச்சு ஒரு எக்ஸாம் எழுதி வைப்போம் என்றும், ஏனோ தானோ என எழுதுபவர்களே அதிகம். வேலையை உண்மையிலேயே  நாடுபவர்களுக்கு, இவர்கள் போட்டியாளர்களே அல்ல.


பொதுவாக ஆண்களைவிட பெண்களுக்கு சில நிறுவனங்கள் கட்ஆஃப் மார்க், குறைவாக போடுகிறார்கள். முடிவு அப்படி இருக்காது. ஏனென்றால் மொத்தம் உள்ள பத்து லட்சம் பேரில் ஆறு லட்சம் பேர் பெண்களே. ஆண்கள் நான்கு லட்சம் பேரே எழுதுகிறார்கள். பத்து, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் ஆண்களை விட பெண்களே கூடுதல் மதிப்பெண் எடுப்பதால் 30% ரிசர்வேஷன் இருந்தாலும் ஆண்களை விட பெண்களுக்கு கட்ஆஃப் கூடுதலாகவே வரும்.

பொதுவாக ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் இருந்தால் முழுத்திறன் பெற்றவர்கள் ஓரிருவரே இருப்பார்கள். நன்றாக படிக்கக் கூடியவர்கள் இருபது சதவிகிதம் இருப்பார்கள். மிச்சமுள்ளவர்கள், சராசரிக்கு மேலாகவோ, சராசரியாகவோ, இல்லை சராசரிக்கு கீழோ இருப்பார்கள்.

ஆனால் போட்டித் தேர்வினை பொருத்தவரை முழுமையான அறிவுத்திறன் பெற்றவர்கள், பத்தாம் வகுப்பில் 90% மதிப்பெண் பெற்றவர்கள், அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் 80% மதிப்பெண் பெற்றவர்கள், பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி எடுத்தவர்கள் மட்டுமே ஒரு போட்டியை உருவாக்க முடியும்.

பலதரப்பட்ட முறையில் எங்களுக்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் 180 கேள்விகள் முதல் 200 கேள்விகள் வரை பெறுபவர்கள் ஆக்டிவ் போட்டியாளர்கள் இரண்டு லட்சம் பேரில் 5000 வரை இருக்கலாம் என மதிப்பிடுகிறோம். இவர்கள் தமிழில் 90 முதல் 100 கேள்விகளும், கணக்கில் 25 கேள்விகள் வரையிலும், பொது அறிவில் 60 கேள்வி வரையிலும் சரியாக எழுதியவர்களாக இருப்பார்கள்.

அடுத்த நிலையில் 150 கேள்விகள் முதல் 180 வரை சரியான பதில் எழுதியவர்கள் ஆக்டிவ் போட்டியாளர்கள் இரண்டு லட்சம் பேரில் 10% அதாவது இருபதாயிரம் பேர் இருப்பார்கள் என மதிப்பிடப்படுகிறோம். இவர்கள் தமிழில் 85 முதல் 95 வரையான கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தவர்களாகவும், கணக்கில் 20 முதல் 25 கேள்விகளுக்கு சரியான விடையளித்தவர்களாகவும், பொது அறிவில் 50 கேள்விகளுக்கு சரியான விடையளித்தவர்களாகவும் இருப்பார்கள்.

மூன்றாவது பிரிவில் உள்ளவர்கள் 140 முதல் 150 கேள்விகளுக்கு சரியான விடை அளித்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் பொதுவாக தமிழில் 80 முதல் 90 வினாக்களுக்கு சரியான விடை அளித்தவர்களாகவும்,கணக்கில் 15 முதல் 25 கேள்விகள் வரையிலும், பொது அறிவில் 35 முதல் 45 வினாக்களுக்கும் சரியான விடையளித்தவர்களாகவும் இருப்பார்கள். இவர்களது எண்ணிக்கை ஆக்டிவ் போட்டியாளர்கள் இரண்டு லட்சம் பேரில் 15% அதாவது முப்பதாயிரம் பேர் வரை இருப்பார்கள். குறைந்தபட்சம் 55000 பேர் மெயின் எழுதுவார்கள்.

அதனால் 140 கேள்விகளுக்கு மேல் சரியான விடை எழுதிய SC BC MBC OC அனைத்து பிரிவினரும் மெயின் எக்ஸாமுக்கு இப்போது முதலே படிக்கத் தொடங்கலாம்.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு