Trending

உடல் எடையை குறைக்கும் எளிய வழிகள் | Weight Loss Tips

 

உடல் எடையை குறைக்கும் எளிய வழிகள்

சென்ற வாரம் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சிறுமியின் பருமனான உடலை பார்த்து சக தோழிகள் கேலி கிண்டல் செய்ததால் இந்த முடிவை எடுத்து விட்டார். உடல் பருமன் என்பது அதிகப்படியான உணவை உண்பதால் மட்டும் வருவதல்ல. பரம்பரை காரணமாக இருக்கலாம், உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான உப்பு, தைராய்டு போன்ற சுரப்பிகள் காரணமாக இருக்கலாம். உடல் பருமன் உள்ளவர்கள் தாழ்வு மனப்பான்மையால் அவதிப்படுகிறார்கள். உடலை சுட்டிக்காட்டி  சிலர் தங்கள் கன நேர சந்தோஷத்துக்காக கேலி செய்கிறார்கள். திரைப்படத்தில் கூட ஊமை செவிடு உடல் பருமன் போன்றவற்றை மையப்படுத்தி நகைச்சுவை காட்சிகளை அமைக்கிறார்கள். விளையாட்டாக அவர்கள் இதை செய்தாலும் இந்தச் செயல்கள்  உயிரை போக்கிக் கொள்ளும் அளவுக்கு ஒருவரை மணவேதனை அடையச்செய்கிறது  என்பதை அவர்கள் உணருவதில்லை.


உடல் எடையினால் அழகை இழக்கிறார்கள். விரும்பிய உடையை அணிய முடிவதில்லை. உடல் பருமனால் இதய நோய், நுரையீரல் செயல்பாடு, கல்லீரல் குறைபாடு, சிறுநீரக செயல் இழப்பு, இரத்த அழுத்த ஏற்றத்தாழ்வு, சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுகிறது. 150 செமீ

அதாவது 5 அடி உயரம் கொண்டவர்கள் சென்டிமீட்டரில் நூறை கழித்து 50 கிலோ உடல் எடை இருக்க வேண்டும். 170 சென்டிமீட்டர் உயரம் இருந்தால் நூறை கழித்து 70 கிலோ இருக்க வேண்டும்.  முன்னால் முதல்வர் ஜெயலலிதா ஐந்தரை அடி உயரம் உள்ளவர். அவருக்கு 65 கிலோ மட்டுமே எடை இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரது எடை அப்போது 110 கிலோ. அதனால் அவருக்கு மரணம் எளிதாக வந்துவிட்டது. பல கோடி ரூபாய் செலவழித்து கொரானாவில் இருந்து மீண்ட SP பாலசுப்பிரமணியன் மறைவுக்கு காரணமும் இந்த அதீத உடல் எடைதான்.


100 கிலோ எடை உள்ளவர்கள் கூட படிப்படியாக எடையை குறைக்கலாம். கமலஹாசன், விக்ரம் போன்ற நடிகர்கள் கெமிக்கல் இன்ஜெக்ஷன் மூலம் நினைத்தால் உடல் எடையை கூட்டுகிறார்கள். நினைத்தால் குறைத்துக் கொள்கிறார்கள். இது மிக மிக தவறான முறை.


சாப்பிடாமல் இருந்து, விரதங்கள் இருந்து, அல்லது குறைவாக சாப்பிட்டு சிலர் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறார்கள். இது எந்தப் பயனையும் அளிக்காது. மாறாக உடல் பலவீனமடையும்.


உடல் எடையை  குறைத்தே ஆக வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் எதை எதை சாப்பிடக்கூடாது என்பதை முதலில் சொல்கிறேன்.  சாலையோரக்கடைகளில் விற்கும் பொருட்களை வாங்கி சாப்பிடக்கூடாது. ஓட்டல்களில் விற்கும் பொருட்களை வாங்கி  சாப்பிடக்கூடாது. பேக்கரியில் விற்கும் பொருட்களில் பிரெட், ரஸ்க் தவிர பாக்கி எல்லா பொருட்களுமே உடல் எடையை கூட்டுபவைதான். எந்த ஃபிளேவரில் செய்து இருந்தாலும் கேக் அயிட்டம் எதையும் தொடவே கூடாது. கேக்கில் உள்ள மைதா, ஜீனி, டால்டா, வெண்ணெய்  கிரிம், செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறங்கள், சாக்கலேட் வெண்ணிலா போன்ற ஃபிளேவர்கள் அனைத்தும் கெடுதல்தான்.


குளிர் பானங்கள் குடிக்கக்கூடாது. அது எவ்வளவு பெரிய கம்பெனி தயாரித்து இருந்தாலும் அது உடல் எடையை கூட்டும் ஒரு கெடுதலான பொருள்தான். ஐஸ்கிரீம் சாப்பிடக்கூடாது.  எக்ஸ்பயரி தேதி அதிகம் உள்ள பேக்கேஜில் அடைக்கப்பட்ட எந்த உணவு பொருளையும் சாப்பிடக்கூடாது. லேஸ், குர்குரே, பிங்கோ போன்ற பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ் எந்த வகையையும் சாப்பிடக்கூடாது. உப்பு உடலில் உள்ள நீர்ச்சத்தை உறியக்கூடியது. அதனால் உப்பு அதிகம் உள்ள ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை உண்ணக்கூடாது. 


கார்போஹைட்ரேட்ஸ் நிறைந்த நார்ச்சத்து இல்லாத பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, ஆப்பிள், வாழைப்பழம், உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், இனிப்புகளை முடிந்தவரை குறைக்க வேண்டும். அதிகப்படியான கலோரி கொண்ட உணவுகளை உண்டால், உடற்பயிற்சியோ அன்றாட வீட்டு வேலைகளை அவசியம் செய்ய வேண்டும். இல்லையென்றால் எரிக்கப்படாத கலோரிகள் அதாவது பயன்படுத்தப்படாத ஆற்றல் கொழுப்பாக மாறுகிறது. இது பெரும்பாலும் ஆண்களுக்கு இடுப்புக்கு மேல், வயிற்றிலும், பெண்களுக்கு அடிவயிறு, பின்புற புட்டம் மற்றும் தொடைகளில் சேமிக்கப்படுகிறது. கொழுப்பு உடல் எடை உயர ஒரு காரணியாகிறது.


ஃபாஸ்ட் ஃபுட்  எனப்படும் துரித உணவு சாப்பிடக்கூடாது. சுவைக்காக சேர்க்கப்படும் அஜினமோட்டா, லெமன் சால்ட் போன்ற உப்புக்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தி உடல் எடை கூட வாய்ப்பு ஏற்படுத்துகிறது. தெருவுக்கு தெரு பீஸா, பர்கர் கடைகள் முளைத்துள்ளன. அங்கு நேராக போய் கூட சாப்பிடாமல் உடம்பு நோகாமல் ஆன்லைனில் ஆர்டர் போட்டு சாப்பிட்டால் உடல் எடை கூடாமல் என்ன செய்யும்? அதனால் அதை தவிர்க்க வேண்டும். உழைப்பு அதிகம் இல்லாதவர்கள், மைதாவினால் செய்யப்பட்ட பராட்டோவை தவிர்க்க வேண்டும். அது போல மசாலா நூடுல்ஸ்களையும் தவிர்க்க வேண்டும். இவற்றில் பாமாலின் ஆயில் போன்ற கொழுப்பு எண்ணெய்கள் சேர்க்கப்பட்டு இருக்கும்.


எது சாப்பிடக்கூடாது என சொல்லி விட்டேன். எப்படி சாப்பிட வேண்டும்? உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் சாப்பிடுவதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கலாம். அதனால் உணவின் அளவு குறையும். ஒரே சீரான இடைவெளியில் ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டும். ஒவ்வொரு வேலையும் சாப்பிடும் நேரம் மாறிக் கொண்டே இருக்கக்கூடாது. ஒரு வேளைக்கும் அடுத்த வேலைக்கும் இடையில் சீடை முறுக்கு மிக்ஸர் போன்ற நொறுக்கு தீனிகள் சாப்பிடக்கூடாது. முக்கியமாக தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டோ, செல்போன் பாரத்துக் கொண்டோ சாப்பிடக்கூடாது. அரிசியை உணவாக உட்கொள்பவர்கள் சாதத்தை குறைவாகவும் காய்கறிகளை அதிகமாகவும் சேர்த்து கொள்ள வேண்டும்.


உடலில் சேரந்துள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க என்ன செய்யலாம்? உண்டி சுருங்குதல் பெண்டிருக்கு அழகு என்றார் ஔவையார். பெண்டிருக்கு மட்டுமல்ல ஆடவர்க்கும் அதுதான் அழகு. கொழுப்பு கரைய 45 நிமிடமாவது நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.  வாக்கிங் மட்டுமல்ல மெல்லோட்டம் எனப்படும் ஜாகிங், சுவிம்மிங் எனப்படும் நீச்சல் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இதனால் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 6 முதல் 7 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சோம்பு ஊறவைத்த தண்ணீர் குடிக்கலாம். நாள் முழுவதும்  சாதாரண தண்ணீருக்கு பதில் சீரகம் ஊற வைத்த தண்ணீர் குடிக்கலாம். காலையில்  வெதுவெதுப்பான நீரில் தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது கொழுப்பு கரைய உதவும் ஒரு பானமாகும். டீக்கு பதில் கிரீன் டீ குடிக்கலாம். டீ குடிப்பது தவறல்ல. ஆனால் பல்வேறு வேதிப்பொருட்கள் நிறைந்த வெள்ளை சர்க்கரை சேர்த்து குடிக்கக் கூடாது. இரும்பு, பாஸ்பரஸ் நிறைந்த வெல்லம் சேர்த்து குடிக்கலாம். முதல் நாள் கொள்ளு பயிரை ஊறவைத்து அந்தத் தண்ணீரை மறுநாள்  குடித்து வர கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும். கொள்ளு ரசம் வைத்தும் சாப்பிடலாம். அமுக்ரா வேர் கலந்த தண்ணீர் குடிக்கலாம்.


ஒரு பல் பூண்டை காலையில் மென்று சாப்பிடுவது கூட உடல் எடை குறைக்கும் ஒரு மருந்தாகும். காய்கறிகள், பழங்களை உணவுக்கு பதில் உட்கொள்ள வேண்டும். வெள்ளரிக்காய், சுரைக்காய்  உடல் எடை குறைய வாரம் மூன்று முறை சேர்த்து கொள்ளலாம். பப்பாளி காயையும் உடல் எடை குறைய சமைத்து உண்ணலாம். வால்நட் பாதாம் வேர்கடலையில் கொழுப்பை கரைக்கும் நல்ல கொழுப்புகள் உள்ளன. செவ்வாழை அதிக கலோரி இல்லாத உணவாக இருப்பதால் இதை சாப்பிடும் போது பசி எடுக்காமல் இருக்கும்.


காலை இரவு உணவாக நார்ச்சத்து உள்ள சப்பாத்தி எடுத்து கொள்வது சிறந்த உணவாகும். ஏழு எட்டு மணி நேரம் சீரான உறக்கம் கொள்வது உடல் உறுப்புகளுக்கு தேவையான ஓய்வு கொடுப்பதற்கு சமமாகும். பகலில் பத்து அல்லது பதினைந்து நிமிடம் தூங்கலாம். அதற்கு மேல் தூங்கினால் அதுவும் உடல் எடை அதிகமாக ஒரு காரணமாக அமைந்துவிடும்.


பொதுவாக எல்லா கீரைகளையும் சேர்த்து கொள்ளலாம். குறிப்பாக முருங்கை கீரையுடன் உப்பும் தண்ணீரும் சேர்த்து கொதிக்க வைத்து சூப்பாக குடித்தால் உடல் எடை குறையும். இஞ்சி தேன் கலந்து கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடிக்கலாம்.


சிறு தானியங்கள், கொண்டைக்கடலை தட்டை பயறு சோளம் போன்றவை அதிக கலோரி இல்லாத கொழுப்பு இல்லாத உணவுகளாகும். இவற்றை கொஞ்சம் சாப்பிட்டாலும் உடலுக்கு தேவையான சக்தி கிடைத்துவிடும். கிழங்குகளை தவிர பச்சை காய்கறிகள் கத்திரிக்காய், முள்ளங்கி, கேரட், கோஸ், கொத்தரை, அவரை, சுரை,வெண்டி போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம். எல்லா காய்கறிகளையும் போட்டு கொதிக்க வைத்து சூப்பாக குடிக்கலாம். உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைத்துவிடும்.

உடல் எடை குறைய, வெங்காயம், பூண்டு, இஞ்சி போன்றவற்றை அதிக அளவில் உணவு தயாரிக்கும்போது பயன்படுத்த வேண்டும்.


மேற்கண்ட எல்லா முறைகளையும் ஒரே நாளில் செய்து பார்க்க வேண்டும் என்று அவசியமில்லை. நம்முடைய உடல் எதை ஏற்றுக்கொள்கிறது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். பத்து நாள் கடைபிடித்து விட்டு உடல் எடை குறையவில்லை என நிறுத்தக்கூடாது. தொடர்ந்து பல மாதங்கள் இவற்றை பின் தொடரவேண்டும். ஒரு கிலோ எடையை உயர்த்துவது எளிது. குறைப்பது கடினம். பொறுமையை கையாள வேண்டும். சேர்க்க கூடாது என்று சொல்லப்பட்ட உணவுகளின் மீது அதிகப்படியான நாட்டம் இருந்தால் மாதத்தில் ஒரு நாள் மட்டும் குறைவாக சாப்பிடலாம்.


முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை. முயன்று பாருங்கள். ஆரோக்யத்தோடு வாழுங்கள்.

தென்றல் இதழ் 36

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு